Header Ads



நடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்

 நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இதன்படி ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைபொதுஜன பெரமுன சார்பில் (527,364)குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

அதேபோன்று ஈ பி டி பி சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட குலசிங்கம் திலீபன் 3203 விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுன சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச 81.1 வீத விருப்பு வாக்கையும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 78.9 வீத விருப்பு வாக்கையும் பெற்றுள்ளனர்.


இதேவேளை உயர்ந்த பட்சமாக விருப்பு வாக்குளை பெற்ற போதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகாத மூவர் தொடர்பான விபரங்களும் வெளியாகியுள்ளன.


இதன்படி பொதுஜன பெரமுன சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டலக்ஸ்மன் யாபா அபேவர்தன 71106 விருப்பு வாக்கை பெற்றபோதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகவில்லை.


அதேபோன்று பொதுஜன பெரமுன சார்பில் காலி மாவட்டத்தில் போட்டியிட்ட டில்ஷான் விதானகமகே 56484 வாக்குகளை பெற்றபோதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகவில்லை.


களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட இப்திகார் ஜமீல் 54305 வாக்குகளை பெற்ற போதிலும் நாடாளுமன்றுக்கு தெரிவாகவில்லை


இதனிடையே இருவருக்கிடையில் குறைந்தளவு விருப்பு வாக்குகள் அடிப்படையில் நாடாளுமன்றுக்கு தெரிவாகாதவர்களின் விபரங்களும் வெளிவந்துள்ளன.


மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட ரோகினி குமார விஜேரட்ன 27587 வாக்குகளை பெற்ற நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரஞ்சித் அலுவிகார 27171 வாக்குகளை பெற்று வெறும் 416 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.


அதேபோன்று வன்னியில் பொதுஜனபெரமுன சார்பில் போட்டியிட்ட காதர் மஸ்தான் 13454 வாக்குகளை பெற்ற நிலையில் ஜனக் நந்தகுமார 12999 வாக்குகளை பெற்று 455 வாக்குகள் வித்தியாசத்தில் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.


யாழ்ப்பாணத்திலும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட சித்தார்த்தன் 23840 வாக்குகளை பெற்ற நிலையில் சசிகலா ரவிராஜ் 23098 வாககுகளை பெற்று 742 வாக்குகளால் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.


கேகாலை மாவட்டத்தில் சுதத் மஞ்சுள 45970 வாக்குகளை பெற்ற நிலையில் சாந்த குணசேன 45255 வாக்குகளை பெற்று 715 வாக்குகளால் நாடாளுமன்ற வாய்ப்பை இழந்தார்.

2 comments:

  1. களுத்துறை மாவட்ட முஸ்லிகளின் ஒற்றுமையின்மையே இப்திகார் ஜமீலின் தோல்விக்கு காரணம்.இன்னும் 45 வாக்குகள் தொலைபேசி பெற்றிருந்தால் தொலைபேசிக்கு 3 ஆசனங்கள் கிடைத்திருக்கும்.மூன்றாவது உருப்பினராக இப்திகார் வென்றிருப்பார்.
    ரேடியோ சின்னத்தில் பெசில் ராஜபக்சவின் ஏஜண்டாக முஸிம்களின் வாக்குகளைப் பிரித்து முஸ்கிகலின் தெரிவு குறைய வேண்டும் என்ற நோக்கத்தில் கள்மிறக்கப் பட்ட புவாத் ஹாஜியார் 5000 த்துக்கும் மேற்பட்ட வாக்குகளை எடுத்து சமூகத்தின் துரோகியானான்.அவன் எடுத்த 5000 வாக்குகளில் எத்தனை 45 கள் இருக்கின்றன என்பதை எண்ணிப் பாருங்கள்.புவாத் சமூகத்தின் மாபெரும் துரோகி

    ReplyDelete
  2. இப்படி எத்தனை ஹாஜியார்கள் பதிவிக்காகவே அலைகின்றன........

    ReplyDelete

Powered by Blogger.