Header Ads



பேஸ்புக் மூலம் ஒழுங்குசெய்த மோட்டார் பந்தயம் - 39 பேர் கைது, 27 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


பிலியந்தலை, கெஸ்பேவ பகுதியில் முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக 39 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 27 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுடன் அவர்களை கெஸ்பேவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.