கலஹாவில் குண்டுத் தாக்குதல் - நாளை வாக்களிக்கச்செல்ல வேண்டாமென மிரட்டல்
கண்டி கலஹா- குருகேளேவத்த மில்லவ தோட்டத்தில் சற்றுமுன்னர் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்திலுள்ள குடியிருப்பு தொகுதி மீதே இனந்தெரியாத குழுவினரால் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டதாக தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.
இலக்கத்தகடு மூடப்பட்ட ஜீவ் வண்டியில் வந்த குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.
தாக்குதல் நடத்திய கும்பலே, இன்று மாலை நாளை வாக்களிக்க செல்ல வேண்டாம் என்றும் மிரட்டியதாக கலஹா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்- சஹீர் பலீல்
Post a Comment