Header Ads



பெயர் சூட்ட வாய்ப்பு, வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும்


தெஹிவளை மிருககாட்சி சாலையில் பிறந்த 2  புதிய சிங்கக் குட்டிகளுக்குப் பெயர்களைப் பரிந்துரைக்கும் வாய்ப்பு சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் இவற்றைச் சென்று பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நான்கு மாதங்களான இந்த சிங்கக் குட்டிகள் தினமும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படும். “இந்த இரண்டு குட்டிகளும் மிகவும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டாகவும் உள்ளன.


பெயர் பரிந்துரைக்கும் நிகழ்வு அடுத்த வாரம் முதல் ஆரம்பமாகி இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பெயர் சூட்டும் நிகழ்வில் கலந்துகொள்ளும் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படும் என பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.