இன்றைய தினம் (மே 1) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது
இன்றைய தினம் (மே 1) எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விலை திருத்தங்கள் குறித்து உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என கூட்டுத்தாபனத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப் பிறகு, சந்தையில் தற்போது நிலவும் விலைகளே தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment