Header Ads



ISIS, முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்படும் வைரஸ் - எர்துகான்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழு முஸ்லிம் சமூகத்தை அழிக்க செயற்படும் வைரஸ் என துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகான் கடுமையாக சாடியுள்ளார்.

ஐ.எஸ்.ஸை கட்டுப்படுத்த துருக்கி தனது நாட்டு எல்லையில் போதுமான அளவு செயற்படவில்லை என்று பரவலாக குற்றச்சாட்டு எழும் நிலையில், ஈராக் ஜனாதிபதி புவாத் மசூமை சந்தித்த பின்னர் எர்துகான் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

"முஸ்லிம் சமூகத்தை பிரித்து அழிக்கும் மிக மோசமான வைரஸாக ஐ.எஸ். செயற்படுகிறது. இந்த சதுப்பு நிலத்தை சரிசெய்ய ஒரு சர்வதேச திட்டம் கட்டாயமாகும். அந்த குழுவுக்கு எங்கிருந்து பணம் மற்றும் ஆயுதங்கள் வரு கின்றன? அது பற்றி நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் எர்துகான் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.