Header Ads



பிராந்திய ஊடகவியலாளர்கள் + எழுத்தாளர்களின் கவனத்திற்கு..!

இலங்கை முஸ்லிம்களின் இணையத்தள ஊடக வரலாற்றில், பிராந்திய நிருபர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களுக்கு முதன்முதலில் ஊக்குவிப்பு தொகை வழங்கிய மகிழ்ச்சியான விடயம் ஜப்னா முஸ்லிம் இணையத்தை சாரும் (அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹவுக்கே)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம், இலங்கையில் ஜப்னா முஸ்லிம் இணையத்தை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடை செய்திருந்தது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர், ஜப்னா முஸ்லிம் இணையம் மீதான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு பிரத்தியேகமாக செய்திகளை அனுப்பிவைக்கும் பிராந்திய ஊடகவிலாளர்கள் மற்றும் பிரத்தியேகமாக கட்டுரைகளை அனுப்பிவைக்கும் எழுத்தாளர்களுக்கும் இன்ஷா அல்லாஹ், ஊக்குவிப்புத் தொகையை (எம்மால் முடிந்த) வழங்க ஜப்னா முஸ்லிம் இணையம் தீர்மானித்துள்ளது.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கும் விளம்பர கட்டணங்களில் இருந்தே இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும்.

அந்தவகையில் பிராந்திய நிருபர்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு மாத்திரம் பிரத்தியேகமாக செய்திகளை அனுப்பும் ஊடகவிலாளர்கள் மற்றும் பத்தி எழுத்தாளர்களுக்கு மாத்திரமே இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படுமென்பது கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.