Header Ads



சட்டத்தை கையில் எடுக்ககூடாது - பொது பலசேனாவுக்கு இராணுவம் எச்சரிக்கை


நாட்டில் சட்டத்தை கையில் எடுக்கும் எத்தகைய செயற்பாட்டிற்கும் இடமளிக்க முடியாதென இராணுவம் சிங்களபௌத்த கடும்போக்கு அமைப்பான பொதுபல சேனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ தலைமையகத்திற்கு கடந்த வியாழக்கிழமை அழைக்கப்பட்ட பொதுபல சேனா முக்கிய பிரமுகர்களிடமே இராணுவத்தின் இந்த நிலைப்பாடு தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, அமைதியை நிலைநாட்ட இராணுவமும், பொலிசும் உள்ள நிலையில் வேறு எவரும், எந்த சமூகத்திற்கெதிராகவும் செயற்பட அனுமதிவழங்கமுடியாது எனவும் இராணுவ உயர் அதிகாரிகள் இதன்போது பொதுபல சேனாவுக்கு விளக்கிகூறியதாகவும் அந்த பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.



7 comments:

  1. அல்ஹம்டதுலில்லாஹ் நீண்ட நாட்கலின் பின்னர் ஒரு ஒலிக்கீற்ற்று தென்படுகிறது.

    ReplyDelete
  2. this type desition taking government should be ways welcome who ever their should obey to the rules of this mother lanka, the president we as muslim always with you

    ReplyDelete
  3. Otherwise there is no law and order in this country congratulations to sl army's

    ReplyDelete
  4. பொதுபல சேனா சட்டத்துக்கு முரணாகத்தான் செயற்படுகிறார்கள் என்பதற்கு இச்செய்தி நல்லதொரு ஆதாரம் ... அப்படியாயின் ஏன் இவ்வளவு காலமாக இவர்களுக்கு எதிராக எந்த வித சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்பது தெரியுமோ... அதுதான் இந்த ராஜபக்ச அன் கம்பனியின் ஆதரவும் ஆசீர்வாதமும் இந்த இனவாத சக்திகளுக்கு உண்டு.

    ReplyDelete
  5. சகோதரர் ஹசன்.....இந்த ஒலிக்கீற்று நெஞ்சை தொட்டுச் சென்றாலும் ,,,,மனதில் நிறைந்தும், உறைந்துமுள்ள சந்தேகக் கணைகள் நீங்கவில்லை........

    ReplyDelete
  6. Poi solrangayyaa.......

    ReplyDelete
  7. Wait and see very soon they going to fight each others.

    ReplyDelete

Powered by Blogger.