தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக மகிந்தவுக்கு எதிராக பொன்சேகா பேசுகிறார்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்ய குழுவை அனுப்பியவர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவே. ரணில் மற்றும் லசந்தவின் சகோதரரும் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்கள். தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்காக சரத் பொன்சேகா, NPP அரசாங்கத்திற்கு சார்பாகவும், மகிந்தவுக்கு எதிராகவும் பேசுகிறார். அது தொடர்பில் நாம் அதிகமாக கதைக்க விம்பவில்லை. சரியான சந்தர்ப்பத்தில் விபரங்களை தெரிவிக்கிறேன். இந்த அரசாங்கம் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதால், தனது பக்கம் குற்றம் இருப்பதால், அதை மறைப்பதற்காக ராஜபக்சவுக்கு எதிராக பேசுவதாக ஒரு சந்தேகம் எழுகிறது.
மகிந்த ராஜபக்சவின் ஊடகச் செயலாளர் மனோஜ் கமகே மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய விசேட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment