தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் வபாத்
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் சாஹிப் இன்று (24 மே, 2025 இரவு 9 மணி) இறைவனிடம் மீண்டார்.
மௌலானா மௌலவி முஃப்தி காஜி டாக்டர் சலாஹுத்தீன் அய்யூப் அல்அஸ்ஹரி அவர்கள் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தலைமை காஜியாக இயங்கி வந்தார்.
அதற்கு முன்பு சென்னை புதுக் கல்லூரியில் அரபி பேராசிரியராகப் பணியாற்றினார். 1880-இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அவருடைய பாட்டனாரின் தந்தையார் காஜி உபைதுல்லாஹ் நக்ஷ்பந்தி தான் தமிழ்நாட்டின் முதல் காஜி ஆவார்.
அல்லாஹ் அவருடைய பிழைகளையும் பாவங்களையும் மன்னித்தருள்வானாக. சுவனத்தின் உயர்ந்த மாளிகைகளில் சேர்த்துக் கொள்வானாக. ஆமீன்.
- Azeez Luthfullah -
Post a Comment