Header Ads



திருடனைப் பார்க்க வைத்தியசாலை சென்ற நீதவான்


கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரிகளைக் கண்டதும், சந்தேகநபர் வீட்டின் கூரை மீது ஏறி தப்பிச் செல்ல முயன்றபோது காயமடைந்துள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவத்தில் அமுகொதுகந்த, பிலான பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய சந்தேக நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி திக்கும்பூர் பகுதியில் கறுவாப் பட்டை திருட்டு தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் வீட்டில் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.


தகவலின் பேரில் பொலிஸார் வீட்டுக்குச் சென்ற போது சந்தேகநபர் குளியலறையில் இருந்து கூரையின் மீது ஏறி தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.


இதன்போது அவர் கூரையிலிருந்து தரையில் விழுந்து கால் முறிந்த நிலையில், பொலிஸாரால் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், காலி பதில் நீதவான் இன்று (17) வைத்தியசாலைக்கு சென்று சந்தேக நபரை பரிசோதனை செய்துள்ளார்.

No comments

Powered by Blogger.