Header Ads



லிபிய கடலில் உயிருக்காக போராடிய, இலங்கையர்கள் உட்பட 440 பேர் மீட்பு (படங்கள்)


புலம் பெயர்ந்து சென்றவேளை பாதுகாப்பற்ற கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட 440 புலம்பெயர்ந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


வட ஆபிரிக்காவில் இருந்து ஐரோப்பாவிற்கு இவ்வாறு பாதுகாப்பற்ற கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பினர் நேற்று (05) இவர்களை மீட்டுள்ளனர்.


ஏப்ரல் 1ம் திகதி லிபியாவின் பெங்காசி அருகே அதிக பாரம் ஏற்றிய மீன்பிடி படகின் மூலம் இவர்கள் இத்தாலி செல்ல முயன்றனர். கடலில் பயணம் செய்த அவர்கள் 11 மணி நேர கடினமான நடவடிக்கைக்கு பின் மீட்கப்பட்டனர்.


சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து, சோமாலியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இந்த புலம்பெயர்ந்த குழுவில் 08 பெண்களும் 30 குழந்தைகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


04 நாட்கள் கடின கடல் பயணத்தில், கடந்த இரண்டு நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி இவர்கள் தவித்துள்ளனர்.



No comments

Powered by Blogger.