Header Ads



கபூரியாவின் நிலையறிந்து கண்ணீர் விட்டழுத ஒரு தாய்

 
- ஏ.ஆர்.ஏ.பரீல் -

“எங்­க­ளது கல்­லூ­ரியின் மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்ட செய்­தி­ய­றிந்து உம்மா தொலை­பே­சி­யூ­டாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்­மாவின் அழுகை என்­னையும் அழ வைத்­து­விட்­டது. யா அல்லாஹ் எங்­க­ளுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கத­றி­ய­ழுதேன்.’’


மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியின் க.பொ.த சாதா­ரண தரத்தில் பயிலும் மாணவர் ஒரு­வரைச் சந்­தித்து கல்­லூ­ரியின் மின்­துண்­டிப்பு தொடர்பில் வின­வி­ய­போது அவர் இவ்­வாறு தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தினார்.


அம்­மா­ணவர் தொடர்ந்தும் தனதும் சக மாண­வர்­க­ளி­னதும் நிலை­மை­யினை விளக்­கினார். “கல்­லூ­ரியில் மின் துண்­டிக்­கப்­பட்­டதால் நாங்கள் பல சிர­மங்­களை எதிர்­கொண்டோம். சில வேளை எங்­க­ளுக்கு குடிப்­ப­தற்­குக்­கூட போதிய நீர் இருக்­க­வில்லை. மின் துண்­டிப்பு கார­ண­மாக நீர் விநி­யோ­கமும் தடைப்­பட்­டது. கல்­லூ­ரியில் பரீட்சை நடந்து கொண்­டி­ருந்ததால் நாங்கள் இரவு வேளையில் பாடங்­களை மீட்க முடி­யாது பல சிர­மங்­களை எதிர்­கொண்டோம். இரவில் தூக்கம் வர­வில்லை. விடு­திக்குள் மின்­வி­சி­றிகள் இயங்­கா­மை­யினால் வெப்­ப­மாக இருந்­தது. நுளம்­பு­களும் தொல்லை தந்­தன. பாடங்­களை மீட்­டிக்­கொள்ள வாய்ப்பு கிடைக்­கா­மை­யினால் எங்­க­ளுக்கு பரீட்­சைக்கு ஒழுங்­காக முகம் கொடுக்க முடி­யா­மற்­போ­னது.


எங்­க­ளது நிலை­மை­யை­ய­றிந்து உம்மா தொலை­பே­சி­யூ­டாக அழு­தமை என்னை மீளா கவ­லையில் ஆழ்த்­தி­யுள்­ளது’’ என்றார்.


கல்­லூ­ரியில் பயிலும் கல்­விப்­பொ­துத்­தா­ரா­தர உயர்­தர மாணவர் ஒருவர் விளக்­க­ம­ளிக்­கையில் “நான் கபூ­ரி­யாவில் உயர்­தர வகுப்பில் படிக்­கிறேன். 5ஆம் வருட மாணவன். பரீட்சை நடந்து கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­திலே கல்­லூ­ரிக்­கான மின்­சாரம் கல்­லூ­ரியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களின் கோரிக்­கைக்கு இணங்க மின்­சாரம் வழங்கும் நிறு­வ­னத்­தினால் துண்­டிக்­கப்­பட்­டது.இப்­போது பரீட்சை முடிந்து விட்­டது. பல சவால்­க­ளுக்கு மத்­தியில் பரீட்­சையை எதிர்­கொண்டோம். படித்­த­வை­களை மீட்­டிப்­பார்க்கக் கிடைக்­க­வில்லை. இரு­ளுக்குள் ஒரு­வரை ஒருவர் பார்க்க முடி­யா­த­வாறு முடங்­கிக்­கி­டக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது.


வழ­மை­யாக மாண­வர்கள் படித்து விட்டு இரவு 10 மணிக்கே நித்­தி­ரைக்குச் செல்வோம். அதி­காலை 4 மணிக்கு எழுந்து தஹஜ்ஜத் தொழு­கையில் ஈடு­ப­டுவோம்.இந்த மின்­துண்­டிப்பு எங்கள் அனைத்து செயற்­பா­டு­க­ளையும் துண்­டித்து விட்­டது.


பரீட்­சைக்குக் படிக்க கிடைக்­க­வில்லை.மின் துண்­டிப்பு கார­ண­மாக நீர்­வி­நி­யோ­கமும் தடைப்­பட்­டது. இதனால் எங்­க­ளுக்கு குடிப்­ப­தற்கும் தண்­ணீர்­ கி­டைக்­க­வில்லை. நான் நான்கு நாட்கள் குளிக்­க­வில்லை. விடு­திக்குள் வெப்பம் கார­ண­மாக தூங்க முடி­யாமற் போனது. நுளம்பு தொல்­லை­யினால் அவ­திப்­பட்டோம். பகலில் விடு­திக்குள் வெப்பம் கார­ண­மாக தங்­கி­யி­ருக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டது.


சில சந்­தர்ப்­பங்­களில் அதிபர் மெழு­கு­வர்த்தி வாங்­கித்­தந்தார். விடு­தி­யொன்­றி­லி­ருந்து அடுத்த விடு­திக்குச் செல்­வ­தற்கு எம்­மி­ட­மி­ருந்த ஒரிரு டோர்ச்­லைட்­களைப் பயன்­ப­டுத்­தினோம். கல்­லூ­ரியில் ஒரு விடுதி மேற்­பார்­வை­யாளர் உட்­பட உஸ்­தாத்மார் ஐவர் இருக்­கி­றார்கள். அவர்­களும் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்­டார்கள். எங்­க­ளது நிலைமை குறித்து கல்­லூ­ரியின் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் எவ்­வித கரி­ச­னையும் கொள்­ள­வில்லை. எனது வாப்பா ஒரு மெள­லவி. உம்மா எனது நிலை­மை­ய­றிந்து துன்­பத்தில் இருக்­கிறார். அழுது கொண்­டி­ருக்­கிறார். வாப்பா பொறுமை காக்­கும்­படி கூறு­கிறார்.


மின்­துண்­டிப்பு கா­ர­ண­மாக நீர்­வி­நி­யோ­கமும் தடைப்­பட்­டதால் விடு­தியில் சாப்­பாடும் உரிய நேரத்தில் கிடைப்­ப­தில்லை. தாம­த­மா­கவே கிடைக்­கி­றது என்றார்.


வக்பு நியாய சபையின் உத்தரவுக்கமைய மின்விநியோக நிறுவனம் (LECO) கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரிக்கான மின் இணைப்பினை மீண்டும் வழங்கியுள்ளது.


Vidivelli

1 comment:

  1. அழுதும் கண்ணீர் விட்டும் புலம்பியும், உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. முதலில் மாணவர்களாகிய நீங்களும், ஆசிரியர்களும் தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் முறையிட்டு அந்த ரப்புடைய உதவியைத் தேடுங்கள். கபூரிய்யா கல்லூரி அதன் பணியைத் தொடர்வது அல்லாஹ்வுடைய ஏற்பாடுகளில் இருந்தால் நிச்சியம் அந்த ரப் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவைத் தருவான். இரண்டாவது, சட்டப்பிரச்சினை. அதனை எவ்வாறு முன்னே எடுத்துச் செல்வது என்பதை இலங்கையில் சிறந்த சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்களை அணுகி அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து பிரச்சினையை எதிர்நோக்குவது. மூன்றாவது இராஜதந்திர ரீதியாக இந்தப்பிரச்சினையை எவ்வாறு எதிர்நோக்கலாம் என்பதை மிகச்சிறந்த இராஜதந்திரிகள் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி திட்டமிட்டு அவர்கள் மூலமும் இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு சரியான முறையில் சிந்தனையையும், அணுகு முறைகளையும் பின்பற்றினால் இந்தப்பிரச்சினைக்கு நிச்சியம் சுமுகமான தீர்வைக் காணலாம். அவை எல்லாவற்றையும் இங்கு எழுத்து மூலம் தெரிவிக்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.