tag:blogger.com,1999:blog-949029781622113645.post2761443350474997185..comments2024-03-28T04:37:31.022+01:00Comments on Jaffna Muslim: கபூரியாவின் நிலையறிந்து கண்ணீர் விட்டழுத ஒரு தாய்www.jaffnamuslim.comhttp://www.blogger.com/profile/13776037325301875506noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-949029781622113645.post-16274540480279294042023-03-19T15:43:14.931+01:002023-03-19T15:43:14.931+01:00அழுதும் கண்ணீர் விட்டும் புலம்பியும், உணர்வுகளுக்க...அழுதும் கண்ணீர் விட்டும் புலம்பியும், உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. முதலில் மாணவர்களாகிய நீங்களும், ஆசிரியர்களும் தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் முறையிட்டு அந்த ரப்புடைய உதவியைத் தேடுங்கள். கபூரிய்யா கல்லூரி அதன் பணியைத் தொடர்வது அல்லாஹ்வுடைய ஏற்பாடுகளில் இருந்தால் நிச்சியம் அந்த ரப் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவைத் தருவான். இரண்டாவது, சட்டப்பிரச்சினை. அதனை எவ்வாறு முன்னே எடுத்துச் செல்வது என்பதை இலங்கையில் சிறந்த சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்களை அணுகி அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து பிரச்சினையை எதிர்நோக்குவது. மூன்றாவது இராஜதந்திர ரீதியாக இந்தப்பிரச்சினையை எவ்வாறு எதிர்நோக்கலாம் என்பதை மிகச்சிறந்த இராஜதந்திரிகள் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி திட்டமிட்டு அவர்கள் மூலமும் இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு சரியான முறையில் சிந்தனையையும், அணுகு முறைகளையும் பின்பற்றினால் இந்தப்பிரச்சினைக்கு நிச்சியம் சுமுகமான தீர்வைக் காணலாம். அவை எல்லாவற்றையும் இங்கு எழுத்து மூலம் தெரிவிக்க முடியாது. Voicing for justice & good governance https://www.blogger.com/profile/14740624627548678060noreply@blogger.com