மரண எண்ணிக்கை 25,000 ஆயிரமாகியது - 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகினர், 900,000 மக்களுக்கு அவசர உணவு தேவை
சனிக்கிழமையன்று துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,848 ஆக உயர்ந்தது, சிரியாவில் 3,553 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
பூகம்பங்களுக்குப் பிறகு சிரியாவில் 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாக இருக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது, அதே நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவில் கிட்டத்தட்ட 900,000 மக்கள் சூடான உணவுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்றனர்.
சிரிய அரசு தனது கட்டுப்பாட்டிற்கு வெளியே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் இரு புதிய பாதைகளை திறக்க நடவடிக்கை எடுத்து வருவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
முதல் பூகம்பத்தின் அதிர்வுகளுக்குப் பிறகு 100 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் தொடர்கின்றன.
இன்ஷா அல்லாஹ் துருக்கி மக்கள் அனுபவிக்கும் இந்த சோதனைகள் மிக விரைவில் நிவர்த்தியாகும். அவர்கள் அல்லாஹ்வைத் தொழுது அவர்களுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி, அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் போது நிச்சியம் அல்லாஹ்தஆலா அவர்களுடைய தற்காலிக கஷ்டங்களையும் துன்பங்களையும் போக்குவான். அவர்களுடைய அரசியல் தலைமையும் தற்போது உலக நாடுகள் காட்டும் அனுதாபமும் உதவிகளும் குறிப்பாக கத்தார் நாடு பத்தாயிரம் நகரும் வீடுகளை அவர்களுக்கு அன்பளிப்புச் செய்து உதவு செய்வதும் சவூதி அரேபியா அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவதும் ஏனைய நாடுகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுகளையும் மருந்து, போர்வைகள் போன்ற பல உதவிகள் செய்து வருவதும் உலகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையை எமக்கு ஏற்படுத்துகின்றது. யா அல்லாஹ் துருக்கி, சிரிய மக்கள் படும் துயர்களைத் துடைத்து அவர்களுக்கு உனது அருளையும் கடாட்சத்தையும் அருளுவாயாக. அவர்களில் அல்லாஹ்விடம் போய்ச் சேர்ந்த உறவுகளை மன்னித்து உனது நிரந்தரமான சுவர்க்கத்தில் சேர்த்து வைப்பாயாக. உறவுகளை இழந்து தவிர்க்கும் குடும்பத்துக்கு உறுதியான ஈமானையும் மன உறுதியையும் பொறுமையையும் வழங்குவாயாக. எமது பணிவான பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக. ஆமீன்.
ReplyDelete