Header Ads



சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் (படங்கள் இணைப்பு)


பாராளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று -09- முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சினாவிற்கு ஆதரவு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் கொழும்பிலுள்ள சீன தூதரகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘கோ ஹோம் சீனா’ என்று சீனாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் அவரின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நவ ஜனதா பெரமுன குழுவினர் தற்போது போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.


இதன்போது தாம் சீனாவை ஆதரிப்பதாகவும் சாணக்கியனின் கருத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.



1 comment:

  1. இந்த மாதிரி நபர்களுக்கு எப்படி கையில் பாணி பூசுவதென்று சீன தூதரகத்துக்கு நன்றாகத் தெரியும். நக்கியவன் நாவிழந்தான் என்ற பலமொழியின் படி இந்த பாப்பைக்கூட்டம் சீனாவின் சீனியை நக்கிக் கொண்டு சீன தூதரக ஆதரவு,கவனிப்புடன் வீடியோ பண்ணுவதற்காக கூடியிருக்கும் இந்த கும்மலுக்கு என்னென்று சொல்வது. இதை எழுதுவனுக்கும் சாணக்கியனுக்கும் எந்த தொடர்மும் இல்லை. ஆனால் இந்த நாட்டு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக மட்டுமன்றி இந்த நாட்டு மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரு சிலரில் சாணக்கியன் மிக முக்கியமானவர். மற்றவர்களைத் தேவையில்லாமல் திட்டும், வசைபாடும் வழக்கம் எனக்குத் தெரிந்தமட்டில் சாணக்கியனிடம் இல்லை. பொதுமக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர் பொதுமக்களின் தேவைகளைத் தான் பாராளுமன்றத்தில் பேசுவார்.

    ReplyDelete

Powered by Blogger.