Header Ads



கறுப்புச் சந்தையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மோசடிக்காரர்கள் - வைத்தியர்கள் குற்றச்சாட்டு


கறுப்புச் சந்தையில் எரிபொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் மோசடிகாரர்கள் எரிபொருட்களை பதுக்கி வைப்பதால் இந்த மோசமான நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்று செய்றபடும் குறித்த நபர்களுக்கு எதிராக பொலிஸாரும், இராணுவத்தினரும் மௌனம் சாதிப்பதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் செல்லும் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன தெரிவித்துள்ளார்.

"எரிபொருள் மாஃபியாக்கள் எரிபொருளை சேகரித்து ஒரு லீற்றர் பெட்ரோலை 650 ரூபாவுக்கும், ஒரு லீற்றர் டீசலை 550 ரூபாவுக்கும் விற்கின்றமையினால், அத்தியாவசிய சேவையான சுகாதார சேவைப் பிரிவினருக்கு எரிபொருள் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், இந்த மோசடிக்காரர்களால் அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.