Header Ads



குழந்தையை கடத்த முயன்ற வயோதிபர் மடக்கிப் பிடிப்பு - பொருட்கள் சிலவும் மீட்பு


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

குழந்தை  ஒன்றைக்கடத்த முற்பட்ட வயோதிபர் ஒருவர் சம்மாந்துறையில் பொது மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் இன்று புதன்கிழமை -29- இடம் பெற்றுள்ளது.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது.

4 வயதையுடைய   ஆண் குழந்தையொன்று சம்மாந்துறை ஹிஜ்ரா 5ஆம் வீதியில் இயங்கும்  பாலர் பாடசாலையிலிருந்து நண்பகல் ஒரு மணியளவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது அவ்வீதியில் நின்றிருந்த 

 55 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் இக்குழந்தையை வாகனம் ஒன்றில்  கடத்த முற்பட்டுள்ளார்.இதன்போது அக்குழந்தை கூக்குரலிட்டு அழுதுள்ளது. இதனை அவதானித்த அவ்வீதியில் நின்றிருந்த பொது மக்கள்  அக்குழந்தையை அவ்வயோதிபரிடமிருந்து காப்பாற்றியதோடு அவ்வயோதிபரை நையப்புடைத்து சம்மாந்துறைப்பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

கைது  செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து  ஒரு தொகை  மருந்துகள், சிறிஞ், ஊசி மற்றும் பாடசாலை மாணவர்களில் உடைகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

No comments

Powered by Blogger.