தலைவராக நியமிக்கப்பட்டார் விமல் வீரவங்ச
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் உறுப்பினர்களின் தலைவராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைக்கு நாடாளுமன்றத்தில் ஒன்பது கட்சிகளை சேர்ந்த சுமார் முப்பதுக்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் 21ம் திருத்தச் சட்டம் குறித்து சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இதன்போது குறித்த குழுவின் தலைமைத்துவம் விமல் வீரவங்சவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் கொழும்பு - 7ல் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றிருந்தது. TW
Post a Comment