பசில் குழுவுடன், இரவிரவாக மைத்திரி ஆலோசனை
தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாக, நேற்றிரவு ஐக்கிய தேசிய முன்னணியுடன் நடத்தவிருந்த கூட்டத்தை திடீரென கடைசி நேரத்தில் ரத்துச் செய்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபருடன் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், நேற்றிரவு 8 மணிக்கு மீண்டும் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டது.
இதற்கமைய நேற்றிரவு ஐதேமு தலைவர்கள் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கத் தயாராகியிருந்த நிலையில், திடீரென, அதிபர் செயலகத்தில் இருந்து. இந்தச் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தவிர்க்க முடியாத காரணங்களால் அதிபரால் சந்திக்க முடியவில்லை என்றும், இன்று இரவு 8 மணிக்கு இந்தச் சந்திப்பு நடக்கும் என்றும் சிறிலங்கா அதிபர் செயலத்தில் இருந்து, ஐதேமு தரப்புக்கு தகவல் அனுப்பப்பட்டது. இது ஐதேமு வட்டாரங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, ஐதேமு தலைவர்களுடனான சந்திப்பை ரத்துச் செய்த சிறிலங்கா அதிபர், அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.
திலங்க சுமதிபால, சுசில் பிரேம ஜெயந்த, வாசுதேவ நாணயக்கார,உதய கம்மன்பில ஆகியோருடன், பசில் ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.
நேற்றிரவு நீண்ட நேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும் இதன் விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்த சூழ்ச்சியும் கூட்டங்களும் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்கிறது. அந்த இரகசியக்கூட்டங்கள் தொடங்க முன்பு அங்கிருக்கும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அறையின் விளக்குகள் அணையும் அத்துடன் கூட்டம் தொடரும்.இந்த கல்யாண கள்ள உறவுகள் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது. அதன் விளைவைத்தான் இன்று யூஎன்பி அனுபவிக்கின்றது. இவன் மனநோயாளி மட்டுமல்ல,ஒருஜினல் முனாபிக். இந்த நாட்டை ஆளுவதற்கு எந்தத் தகுதியுமற்ற வெறும் கள்ளக்கூட்டம்.
ReplyDelete