Header Ads



ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை - மகிந்த ராஜபக்ச

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைப்பதை தடுத்து தன்னை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரே முற்றும் முழுவதுமான சூழ்ச்சியை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தற்போது எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி ஆத்திரமடைந்து கத்தியதாக கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 9ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில் தான் தோல்வியடைய போவதாக அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி தன்னுடன் இருந்த அமைச்சர்களிடம் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுபலவின் ஞானசாரவே இதற்கு முற்றாக பொறுப்புக் கூறவேண்டும். ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம் நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்டவில்லை.

ஒருத்தனின் முட்டாள் தனம் முழு பரம்பரையையும் பாதிக்கும். ஞானசாரவின் பின்னணியில் நோர்வே இருக்கின்றது. அவன் நோர்வேயின் சூழ்ச்சிக்காரன். ஞானசாரவும் டிலந்த விதானகேவும் இணைந்துதான் இந்த விளையாட்டை ஆடினர்.

7 comments:

  1. varuda unamai..... dei nee epdi double game adravan

    ReplyDelete
  2. Nice drama.are you expecting sinhalese vote?in parliment election majority people will also defeat you. In the future.your games over.raja

    ReplyDelete
  3. ஞாசார தேர ஒரு உண்மையான நாட்டு பற்றுடையவன் போன்று நடித்துக்கொண்டு சூழ்ச்சி செய்து வருவது நன்கு தெளிவாகின்றது .எனவே தற்போதைய அரசாங்கம் புதிய சூழ்ச்சிகளில் தன்னை பாது காப்பதற்காக இந்த ஞாசாரவை கைது செய்ய வேண்டும் .

    ReplyDelete
  4. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம் !!!!!!!!

    சும்மா போங்கய்யா நடிக்காம !!!

    ReplyDelete
  5. பஸ்ஸை விட்டு விட்டு கையை காட்டுறாரு

    ReplyDelete
  6. How dare you can put blame on gotta because he has done everything while you were executive president with all powers.

    ReplyDelete
  7. நீ நடிகண்டா..............

    ReplyDelete

Powered by Blogger.