இலங்கையில் தமது ராஜதந்திரி மரணம் - முழு விசாரணையை கோருகிறது சவூதி அரேபியா
(Gtn) தமது நாட்டு ராஜதந்திரியின் மரணம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென சவூதி அரேபியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் பம்பலப்பிட்டியில் உள்ள தொடர்மாடிக் கட்டமொன்றின் நீச்சல் தடாகத்தில் சவூதி அரேபிய ராஜதந்திரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.
ஹூசெய்ன் அல் ஹாஜீ என்ற சவூதி அரேபிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் முழு அளவிலான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சவூதி அரேபிய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.
.jpg)
Post a Comment