Header Ads



கட்டாரில் வாகன விபத்து - இலங்கையர் வபாத்

முஹம்மது ரமீஸ் இமாம், டோஹா கட்டாரில் வபாத்தானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

வவுனியாவில் பிறந்து மதுரங்குளி ஹிதாயத் நகரில் வசித்து வந்த,  முஹம்மது ரமீஸ் இமாம் (39 வயது) என்பவர், கட்டார் நியூ சலாத்தா ஏரியாவில் இன்று (15/08/2013) இடம்பெற்ற வாகன விபத்தில் வபாத்தானார் .

இன்று காலை 7.45 மணிக்கு இவர் நியூ சலாத்தா ஏரியாவில் வாகனத்தை ஓட்டி செல்லும்போது வேறொரு வாகனம் இவரின் வாகனத்துடன்  மோதியதில் இம்மரணம் இடம்பெற்றது.  இவரின் ஜனாஸா தற்போது ஹமத் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சட்ட ரீதியான ஏற்பாடுகள் முடிந்தவுடன் ஜனாஸா அடக்கம் தொடர்பான விபரம் இன்ஷாஅல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும். மேலதிக விபரங்களுக்கு இவரின் மச்சான் நியாஸ் அப்துல் வஹ்ஹாப் அவர்களைத் தொடர்பு கொள்ளவும் (00974 77410457)

ITHREES HASSAN SAHWI

No comments

Powered by Blogger.