Header Ads



சிங்கள மக்கள் கலந்து கொண்ட இப்தார் நிகழ்வு (படங்கள்)


(இக்பால் அலி)

பண்ணாவ அல் ஹிஜ்ரா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் சர்வ சமயத் தலைவர்கள் மற்றும் சிங்கள மக்கள் கலந்து கொண்ட விசேட இப்தார் நிகழ்வு பண்ணாவ முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று 21-7-2013 நடைபெற்றது. 

கழத்தின் தலைவர் முஹம்மட் ஆரீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதான இமாம் அஷ்ஷெஹ் எம். எவ். ஜே. ஈத் ரமளான் விசேட மார்க்கச் சொற்பொழிவாற்றினார். உஸ்கல ரஜமஹா விஹாராதிபதி மற்றும் நிகவெரடிய மங்கல விஹாராதிபதி குளியாப்பிட்டிய முருகன் கோவில் பிரதான குரு, நிகவெரடிய கத்தோலிக்க வண பிதா மில்ரொய் பெர்ணான்டோ ஆகியோருடன் கொபெயிகனே பிரதேச சபைத் தலைவர் உட்பட கிராமத்தின் சிங்கள மக்கள் பலர் கலந்து கொண்டனர்.


9 comments:

  1. why can not we invite BBS and Singhala Ravaya for IFTHAR program.?

    ReplyDelete
  2. nallaathaan ice vaikkanum ivangalukku

    ReplyDelete
  3. இது தேவேயே இல்லாத வேலை.அவர்கள் பன்சலைக்கு தனே என்று குப்பிட்டால் நாங்கள் முஸ்லிம்கள் போகுமா?இப்தார் என்பது நோன்பு நோற்றவர்களுக்கு கொடுக்கும் உணவு விருந்து............யார் யார் எல்லாம் சாப்பிட்டு குடித்து போறாங்கோ.இவர்கள் செய்யும் வேலையினால் நோன்பின் மகிமையும் இழக்க நேரிடுகின்றன.

    ReplyDelete
  4. ஆமாம் முஸ்லிம்கள் திண்ணிப் பண்டாரங்கள் என்று காட்டுவதற்குச் சரியான நிகழ்ச்சி. பகல் முழுவதும் பசியோடிருந்து விட்டு, மாலையானதும் வயிறு முட்டச் சாப்பிடுகிற ஜாதி என்று எல்லாருக்கும் காட்டுவோம்.

    ReplyDelete
  5. எமது முஸ்லிம்களில் பெரிய பெரிய முட்டாள்களும் உள்ளனர் என்ற செய்தி உண்மை தான்.

    ReplyDelete
  6. Ifthar programme is only for Saaims.
    Muslims still did not know the real fact of Siyaam and Islam.
    Is it Iftha? You better name it another name. Do not spoil the Islam and Ifthar.
    You all Politicians now and some Short fact Moulavis spoil the Islam Religion by doing some Bithath.

    ReplyDelete
  7. இவ்வாறு ரசூலுல்லாஹ் யுதர்களையும் கிறிஸ்தவர்களையும் அழைத்து இப்தார் செய்தார்களா? யார் காட்டித்தந்த மார்க்கம் இது? மனம்போன போக்கில் தங்களது காரியங்களை செய்கிறார்கள். கேட்டால் மதநல்லிணக்கம் என்று சொல்கிறார்கள். "அவர்களுக்கு அவர்கள் மார்க்கம், நமக்கு நமது மார்க்கம்"

    ReplyDelete
  8. இது போன்ற செயல்களால்தான் அவர்கள் தைரியமாக முஸ்லீம்களை பாத்து கேட்கிறார்கள்

    " உங்களுடைய பள்ளிவாசலில் எங்களுக்கு பிரித் சொல்ல அனுமதி தருவீர்களா?"

    இப்தார் என்பது நோன்பு நோற்றவர்களுக்கு மட்டும் தானே...
    இவர்கள் எங்கே நோன்பு நோற்றார்கள்?.

    சமூகமே....இப்படியே சென்றால் காலப்போக்கில் இவர்களுக்கு சஹர் உணவு கொடுப்பதட்கு ஏட்பாடு செய்வீர்கள் போல் தெரிகிறதே......

    ReplyDelete

Powered by Blogger.