யாழ் முஸ்லீம் வர்த்தக சங்கம் குறித்து கவலை தெரிவிப்பு
(பாறூக் சிகான்)
யாழ் முஸ்லீம் வர்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயற்படாமல் உள்ளமையினால் தமது பிரச்சினையை வெளிப்படுத்த முடியாதுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்படி சங்கம் வர்த்தகர் ஏ.எல் லாபீர் தலைமையில் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில் வைத்து அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 60 வரையிலான வர்த்தகர்கள் பங்கு கொண்ட இந்நிகழ்வில் 13 பேர் கொண்ட தற்காலிக செயற்குழு அமைக்கப்பட்டது.
இதில் பிரதானமாக எதிர்காலத்தில் முஸ்லீம் வர்த்தகர்கள் எதிர் கொள்ளும் வர்த்தக ரீதியிலான பிரச்சினை,தேவைகள்,அதற்கான தீர்வைகள், குறித்து கலந்துரையாடப்பட்டது.
ஏற்கனவே யாழ் வணிகர் சங்கம் எனும் பெயரில் யாழ் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் சங்கம் ஒன்றினை செயற்படுத்தி அதனூடாக பல சமூக நல திட்டங்களை மேற்கொள்கின்றனர்.
எனவே ஆரம்பிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கான வர்த்தக சங்கம் இயங்காமல் இருப்பது குறித்து கவலையடைவதாக தெரிவிக்கின்றனர்.
Post a Comment