Header Ads



இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு


பயங்கரவாத சதி பின்னணியில் இந்துத்துவா போன்ற அமைப்புகள் உள்ளன என மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அளித்த பேட்டியில், 

சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு மலோகான் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களில் இந்து அமைப்புகளின் பயங்கரவாத செயல்களால் தான் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் தான் முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டனர் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.

இதனிடையே ஷிண்டேவின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஷிண்டேவிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. அடடா.. கண்டு புடிச்சிட்டானுகளாமா? இதை கண்டு பிடிக்கும் வரையில் எத்தனை முஸ்லிம்களை அநியாயமாக கொன்றிருப்பார்கள்

    ReplyDelete
  2. இதை வடிவேலு இப்படி சொல்லுவான் .....

    சுஷில்குமார் ஷிண்டே - நான் நேத்து நடந்ததை சொன்னேன் .

    மணிசங்கர் அய்யர் - நான் பொதுவா சொன்னேன்

    வடிவேலு - நல்லா நடந்திச்சி நேத்து.

    எத்தனையோ உயிர்கள் காவு கொடுக்கப்பட்டன . இந்த காங்கிரஸ் காரர்களுக்கு தேர்தல் வந்தால் தான் ஞானம் பிறக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.