சவூதி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ மருத்துவ பீட கட்டிடத் தொகுதி திறப்பு விழா
சவூதி அரேபிய நிதியில் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத் தொகுதி திறப்பு விழா இன்று (04) நடைபெற்றது.
சவூதி அரேபிய அரசாங்கத்தின் 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சலுகை கடனுதவியில் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பீடத்திற்கான கட்டிடத் தொகுதியை பிரதமர் ஹரிணி அமரசூரிய திறந்துவைத்தார்.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் - கஹ்தானி உள்ளிட்ட மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.





Post a Comment