Header Ads



அஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி


ஆயுபோவன், வணக்கம், அஸ்ஸலாமு அலைக்கும் என்ற வார்த்தைகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை ஆரம்பித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71வது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா சென்றிருந்தார்.

இந்நிலையில், சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நா கூட்ட தொடரில் தனது உரையினை நிகழ்த்தியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை 2017ஆம் ஆண்டு ஏழ்மையில் இருந்து விடுதலை அடையும் ஆண்டாக பெயரிடப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் உருவாகி 20 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் காணப்பட்ட பயம் மற்றும் சந்தேகத்துடான வாழ்க்கை முறையினை மாற்றியுள்ளது.

அத்துடன், மக்களுக்கு வேண்டிய சுகந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையினை உலகில் உள்ள மிகவும் சந்தோசமான நாடுகளினுள் ஒன்றாக மாற்றி மக்களுக்கு கையளிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளோம்.

இதேவேளை, இலங்கை நாட்டின் ஜனாதிபதியாக இக் கூட்டத்தொடரில் கலந்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.



11 comments:

  1. Kindly I suggest to put the heading of this article in a correct way as you have put the heading ASSALAMUALIKUM, AYUBOWAN AND WANAKKAM. but actually the Hon H.E.our Prisidient has stated as AYUBOWAN, WANAKKAM AND ASSALAMUALIKKUM.

    ReplyDelete
  2. Wel said bro pls chang d heading

    ReplyDelete
  3. ஜனாதிபதியின் உரை மிகவும் தெளிவாகவும் பெறுமதியானதுமானதாக இருந்தது.ஜனாதிபதி அவர்கள் சர்வதேச நாடுகளிடம் உதவி கோரும் வார்த்தைகள் மனதை தொட்டு நெகிழ வைத்து கடந்த கால கசப்புகளை ஞாபகப்படுத்துகிறது.ஆடம்பரம் இல்லாத சர்வதேசத்தின் மனதை தொடக்கூடிய வலிமையான பேச்சு நன்றி ஜனாதிபதி அவர்களே.

    ReplyDelete
  4. Yes. This heading is misleading. Please correct it.

    ReplyDelete
  5. ஜனாதிபதியின் ஒற்றுமை வார்த்தைகள்.....

    ReplyDelete
  6. பாருங்கள்.....
    Content ஐ புரிந்து கொள்ளாமல் context களை மாத்திரம் பார்க்கும் எனஉ சமூகத்தின் அறியாமையை.
    தலைப்பை மாற்ற வேண்டும் என்று எழுதும் சகோதரர்ககளே எப்போது நீங்கள் அறிவாளிகளாக மாறப் போகிறீர்கள்

    ReplyDelete
  7. Bro engada samoohathukkahala alla.. idhai paarkkum anniya samuhathukkaha.. neenga adhai vilangikkollungal

    ReplyDelete
  8. Ithu perumaippadawendiya oru vishayamalla ithu oru politition policy

    ReplyDelete
  9. Misleading heading is unnecessary and absolutely wrong. the readers attracted to news by its Title. Do not Lie on title which is NOT a character of a Muslim.
    Half of the people who wrote the comments do not even happy to show their true names. why? are you afraid?

    ReplyDelete

Powered by Blogger.