Header Ads



சர்ஜண்டை திட்டிய தேசிய மக்கள் சக்தி Mp


சட்டவிரோத மதுபான வியாபாரி ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்காக வெலிபென்ன பொலிஸில் பணிபுரியும் ஒரு பொலிஸ் சர்ஜண்டை திட்டியதாகக் கூறப்படும் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ ரணசிங்க தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


அந்தப் பகுதியில் சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபரை பொலிஸ் சார்ஜென்ட் கைது செய்ததை அடுத்து, ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ ரணசிங்க அவரை கடும் வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.


பின்னர் சர்ஜென்ட், சம்பவம் குறித்து வெலிபென்ன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC)யிடம் முறைப்பாடு அளித்தார்.


அதன்படி, வவுனியாவிற்கு இடமாற்றம் செய்வதாக சர்ஜண்டை பாராளுமன்ற உறுப்பினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.