தேங்காய்கள் மூலம் அரசாங்கத்திற்கு உதவப்போகும் பேராயர்
நாட்டில் நிலவும் தேங்காய் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்துக்கு உதவுவதற்கு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் முன்வந்திருக்கிறார்.
அதற்கமைய, பேராயருக்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் உள்ள தேங்காய்களை மானிய விலையில் அதாவது 130 ரூபாவிற்கு அரசுக்கு வழங்க உள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

Post a Comment