Header Ads



40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தகவல் இது


40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2,500 ரூபா அபராதமாகச் செலுத்தியே , தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டுமென  அறிவிக்கப்படவுள்ளது. 


40 வயதிற்கு மேற்பட்ட மற்றும் அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்களே இவ்வாறு ரூபாய் 2500 செலுத்தி, அடையாள அட்டையைப் பெற  வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்படும் அபராதத் தொகையான 250 ரூபாவை வசூலிக்க ஆட்திவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.