Header Ads



"மைத்திரிபாலவை தூக்கில் போட விரும்புபவர்"


2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பல கைதுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தாம் குற்றவாளியாக இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று (25) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக தாம் குறிவைக்கப்படுவது நியாயமற்றது என்று முன்னாள் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்தார்.


2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்ற போதிலும், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், தாக்குதல்கள் தொடர்பாக தன்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட விரும்புவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.


தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறைக்கு அனுப்ப வேண்டும் அல்லது தூக்கிலிட வேண்டும் என்ற அவசர தேவை கர்தினாலுக்கு உள்ளது. ஆனால் உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.