Header Ads



அவுஸ்திரேலியாவில் இலங்கை விமானத்திற்கு கோளாறு


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் நாளை 17ம் திகதி காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.


இந்த விமானம் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விமானத்தின் ஆறு பொறியியலாளர்கள் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான விமானத்தை தற்போது சரி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


இதன்படி, நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு அவுஸ்திரேலியாவிலிருந்து புறப்படும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605, காலை 9.30 மணிக்கு இலங்கையை வந்தடைய உள்ளது.


இந்த பயணத்தின் போது விமானம் 300 இலங்கை பயணிகளுடன் நாட்டை வந்தடையவுள்ளது. 

No comments

Powered by Blogger.