Header Ads



ஓமான் நாட்டவர் மீது தாக்குதல்: அரசியல் வாதியின் சகோதரர் கைதாகவில்லை, 3 பேர் கைது


- Ismathul Rahuman -


ஓமான் நாட்டு ஆடைத்தொழிற்சாலை நிர்வாக இயக்குநரை தாக்கிய மூன்று சந்தேகநபர்களை படல்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். அரசியல் வாதியுடன் தொடர்புபட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.


     படல்கம பொலிஸ் பிரிவில் ஹல்பே பிரதேசத்தில் அமைந்துள்ள ஒபேகாம் ஆடைத்தொழிற்சாலையின் உரிமையாளரான ஓமான் நாட்டைச் சேர்ந்த கல்பான் சலீம் செய்த் ஒபேகாம் மற்றும் காவலாளியை கடந்த 30 திகதி இரவு 10.30 மணியளவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்திய படல்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.


  1. கட்டான, அம்பலாய,கோபிவத்தயைச் சேர்ந்த வன்னி ஆரச்சிகே தில்ருக் 2. கட்டான, அம்பலயாயவைச் சேர்ந்த அமுனுகொல அப்புகாமிலாகே சுமித் பியங்கர (26 வயது) 3.  கட்டான, அம்பலயாயவைச் சேர்ந்த சக்கரவர்திகே பிரதீப் குமார் (40 வயது) ஆகிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.


     சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றி ன் பதில் நீதவான் சியன் திசேரா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது  முதலாம், இரண்டாம் சந்தேகநபர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் மூன்றாவது சந்தேக நபர்  எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

No comments

Powered by Blogger.