Header Ads



கடலில் மிதந்து வந்த, பெண்ணின் ஜனாஸா மீட்பு


பேருவளை பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதி ஒருவர் கடந்த முதலாம் திகதி நள்ளிரவில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயிருந்த நிலையில், இன்று -04- பேருவளை கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


பேருவளை மொல்லிமலே கோவில் வீதியில் வசிக்கும் மொஹமட் பௌமின் ஷஹ்நம் பானு என்ற யுவதியின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த யுவதி காணாமல் போயிருந்த நிலையில், அவரை தேடும் பணியில் பேருவளை பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடந்த மூன்று தினங்களாக ஈடுபட்டிருந்தனர்.


இவ்வாறான நிலையில் பிற்பகல் பேருவளை ஆழ்கடலில் பெண்ணின் சடலம் ஒன்று மிதப்பதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று பல மணித்தியாலங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த போதும் நேற்று சடலம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.


இவ்வாறான நிலையில் இன்று பேருவளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 30 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் பெண் ஒருவரின் சடலம் ஒன்று மிதப்பதாக மீண்டும் மீனவர்கள் அறிவித்ததை அடுத்து பேருவளை மருதானை மீன்பிடி துறைமுகத்திலிருந்து சில மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று குறித்த சடலத்தை கரைக்குக் கொண்டுவந்தனர்.


காணாமல் போயிருந்த யுவதியின் தந்தை இது தனது மகள் என உறுதிப்படுத்தினார்.


அதன் பின்னர் மரண விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி முன்னெடுத்ததுடன் பிரேதப் பரிசோதனைக்காக களுத்துறை வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.