Header Ads



காட்டுக்குச் சென்று பிரபாகரனுடன், நேருக்கு நேர் பேசுவதற்கு திட்டமிட்டிருந்த மஹிந்த


புலிகளுடன் போர் செய்ய மகிந்த ராஜபக்ச நினைக்கவில்லை, சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார் என புதிய ஹெல உறுமயவியன் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.


ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், மகிந்த விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார்.


“நான் வன்னிக் காட்டுக்குச் சென்று  புலிகளின் தலைவருடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன்” என மகிந்த சிந்தனையில் அவர் குறிப்பிட்டிருந்தார் என கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. இவனைக் காட்டுக்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய குழியில் யாரும் தள்ளிவிட்டால் படுபொய், பொய், வஞ்சகத்துக்கு ஓரளவு ஓய்வு கிடைக்கும். இந்த நல்ல கைங்கரியத்தைச் செய்ய யாரும் முன்வரமாட்டார்களா?

    ReplyDelete

Powered by Blogger.