Header Ads



22 வயது காதலியை வீட்டில் படுக்கைக்கு அடியில், மறைத்து வைத்திருந்த 16 வயது மாணவன்


உஹன பிரதேசத்தில் ஒரு மாத காலமாக தனது 22 வயது காதலியை வீட்டில் படுக்கைக்கு அடியில் மறைத்து வைத்திருந்த 16 வயது மாணவன் தொடர்பில் தகவல்கள் பதிவாகி வருகின்றன.


குறித்த மாணவனின் பெற்றோர்கள் கடையொன்றை நடத்தி வருவதாகவும், அவர்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வருவதாகவும் தெரியவந்துள்ளது.


அதன் காரணமாக பகலில் வீட்டில் யாரும் இல்லாததால், தனது காதலியை இரவு நேரத்தில் கட்டிலுக்கு அடியில் மறைத்து வைப்பதாகவும் தெரியவந்துள்ளது.


அறைக்கு அழைத்து வந்து அவருக்குத் தேவையான உணவைக் கொடுத்ததாகவும், ஒரு சந்தர்ப்பத்தில், பகலில் திடீரென வீட்டிற்கு வந்த தாய், அந்த யுவதியை கண்டுபிடித்துள்ளார்.


எனினும் இந்த சம்பவத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என மகன் தயாரிடம கேட்டுக்கொண்டுள்ளார். எனினும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவரையும் பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதாகவும் அப்போது வரையிலும் தந்தைக்கு சம்பவம் தொடர்பில் தெரிய வராமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. TW


No comments

Powered by Blogger.