Header Ads



திருமணத்தில் பலவந்தமாக நுழைந்து உணவு பெற முயற்சித்த இளைஞர்கள்


வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவமொன்றில், பலவந்தமாக நுழைந்து உணவு பெற்றுக்கொள்ள முற்பட்ட குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள் எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது நான்கு இளைஞர்கள் பலவந்தமாக அங்கு நுழைந்து உணவு பெற முயற்சித்துள்ளனர்.


இதுகுறித்து திருமண ஏற்பாட்டாளர்கள் இது குறித்து நகர சபை தலைவர் ஜி.ஜி.எச். யமுனா காந்திக்கு அறிவித்தனர்.


அதன் பின்னர், காவல்துறை அவசர இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த இளைஞர்கள் வெலிகம காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.


நான்கு இளைஞர்களின் பெற்றோரையும் காவல்நிலையத்துக்கு  வரவழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


16, 17 மற்றும் 18 வயதுடைய இந்த நான்கு இளைஞர்களும் எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்த இளைஞர்கள் பல நாட்களாக வெலிகம நகர மண்டபத்தில் நடைபெறும் திருமண வைபவங்களில் வலுக்கட்டாயமாக நுழைந்து உணவு உட்கொள்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். Hiru

No comments

Powered by Blogger.