Header Ads



சஜித் - மைத்திரிபால விசேட சந்திப்பு, பேசப்பட்டது என்ன..?


எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. 

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது. 

இந்த சந்திப்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.