Header Ads



சுவிற்சர்லாந்தில் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டம் (வீடியோ)


சுவிற்சர்லாந்தில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாள் நிகழ்வு இன்று திங்கட்கிழமை 2 ஆம் திகதி சுரிச் சிலீரன் நகரில் நிர்வாகத் தலைவர் ஹனீப் மொஹமட் தலைமையில் இடம்பெற்றது.

மஸ்ஜித்துல் ரவ்ளா பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும், ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்து புனித நோன்புப் பெருநாள் நிகழ்வு பிரன்ஸில் வசிக்கும் தஞ்சவூரைச் சேர்ந்த பசீர் பிஸ்பாஹி பெருநாள் தொழுகையை நடத்தியதுடன், குத்பா உரையையும் நிகழ்த்தினார்.

நிகழ்வில் இலங்கை முஸ்லிம்களுடன் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மெரோக்கா, லிபியா,  அல்ஜீரியா, துருக்கி முஸ்லிம்களும் பங்கேற்றமை விசேட அம்சமாகும். நிகழ்வில் சிறுவர் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.