Header Ads



2 இளைஞர்களைத் தாக்கிய, ஏறாவூர் காவல்துறை அதிகாரி பிணையில் விடுதலை


இரண்டு இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏறாவூர் காவல்துறை அதிகாரி  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை இன்று -23- மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த காவல்துறை அதிகாரியைப் பணி இடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஏறாவூர் காவல்துறை அதிகாரி ஒருவர் இரு இளைஞர்களைத் தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.

1 comment:

  1. இது மாதிரி ஒரு பொது மகனுக்கு அடிக்க யார் இந்த தைரியத்த . கொடுத்த இந்த செயல Video எடுத்த நபருக்கு இறைவன் நற்கூலியை கொடுப்பானாக!

    ReplyDelete

Powered by Blogger.