இஸ்லாத்தை ஏற்றபோது கதறி அழுதேன் - முஹம்மது காலித் (யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட புதிய வீடியோ)
தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இந்நிலையில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாறிய காரணத்தை விடியோவாக வெளியிட்டுள்ளார் யுவன் சங்கர் ராஜா. அதில் அவர் கூறியதாவது, எந்தத் தருணம் என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. இஸ்லாமிய மதத்துக்கு மாறுவதற்கு முன்பு, என் அம்மா உயிருடன் இருந்தபோது உலகுக்கு எப்போது முடிவு எனக் கேள்வி எழுந்தது....

ReplyDelete5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார்
'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்)
நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்:
என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.
மக்கள் இசைக்கருவிகள் இசைப்பது தவறாகும் என்றும் முஹம்மது கூறினார்.