அப்துல் ராசிக்கை பிடியுங்கள் - 2 அமைப்புக்கள் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்கை கைது செய்யுமாறு சிங்கலே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக பல முறைபாடுகள் செய்யப்பட்ட போதிலும், அவர்களுக்கு எதிராக இன்னும் விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
சிலோன் தௌஹீத் ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ராசிக்கை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எமது மக்கள் சக்தி கட்சி மற்றும் சிங்களே தேசிய அமைப்பு ஆகியன இணைந்து இந்த முறைப்பாட்டை இன்று -25- பதிவு செய்துள்ளது. இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து நாடாளுமன்ற தெரிவு குழு முன்னிலையில் அப்துல் ராசிக் வாக்குமூலம் வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனது பார்வையில் இவர் தெளிவான சிந்தனையில் இருக்கிறார். சிறுபிள்ளைத்தனமும் இருக்கிறது. இவரிடம் காணப்படும் அதிகபிரசங்கித் தனம் ஆபத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்.
ReplyDeleteAbdur Razik is the person who has guts to preach Islam in Sinhale language.
ReplyDeleteAll liers who're waging malicious attacks on him must be prosecuted.