Header Ads



முஸ்லிம்களை நோக்கி, பாரிய ஆபத்து - விக்டர் ஐவன் எச்சரிப்பு

சென்ற மாதம் நமது மறுமலர்ச்சி வேலைத்திட்டத்தின் சில  நிகழச்சிகளில் கலந்துகொள்ள நான் அனுரா தபுரம் சென்றிருந்தேன்.  நான் பயணம் செய்த முச்சக்கர வண்டியின்  சாரதி  காலி லபுதுவ பிரதேசத்தை சேர்ந்த  சுமார் 32 வயது மதிக்கத்தக்க அனைவரிடமும் மிக சகஜமாக பழகும் திருணமாகாத ஒரு நபர்.

அனுராதபுரவில் நடந்த நமது மாவட்ட அணிகளுடனான கலந்து ரையாடலின் பின்னர் பகல் உணவுக் காக சோறு கொண்டுவரப்பட்டது. ஒரு  முஸ்லிம் ஹோட்டலலில் இருந்து. 

என்னுடன் வந்த சாரதி  பகல்உணவை உ ட்கொண்டது, பெரும் தயக்கத்துடனு ம், பயத்துடனும் என்பதனை என்னா ல் பார்க்க முடிந்தது. பகல் உணவை உட்கொண்டு விட்டு இன்னுமொரு கலந்துரையாடலுக்காக எனது  பயணத்தை முச்சக்கர வண்டி சாரதியுடன் தொடர்ந்தேன்.  

உணவு உட்கொ ள்ள தயங்கியது தொடர்பில் சாரதியிடம் நான்விசாரித்தேன். மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் மருந்து (வதபெதி) தொடர்பில் தான் ந ம்பியுள்ள அனைத்து விடயங்களையு ம் அவ்விளைஞன்  என்னிடம்  அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே போனான் .

அவன் பேச்சை நிறுத்தியதும் மலட்டுத் தன்மை ஏற்படுத்தும்  மருந் து (வதபெதி) தொடர்பில் உண்மை  த ன்மையை முழுமையாக முச்சக்கர வண் டி சாரதிக்கு நான் விளக்கமாக எடு த்துக் கூறினேன்.

எனது விளக்கத்தை நிதானமாக உள்வாங்கிய முச்சக்கர வண்டி சாரதி இந்த (வதபெதி) தொடர்பில் எந் தளவுக்கு மடமையான கருத்தில்  தா ன் இருந்ததாக மனப்பூர்வமாக உணர் ந்தது மட்டுமல்லாமல்.  அநுராதபு ரத்திலிருந்து திரும்பி வரும் போது, எமது அனுராதபுர மாவட்டமுஸ்லி ம் தலைவரை சந்தித்து இந்த வி டயம் தொடர்பில் மன்னிப்பும் கே ட்டான்.

நான் இந்த விடயத்தை இங்கே குறி ப்பிடக் காரணம்,  இந்த வதபெஹெத் தொடர்பிலான வதந்திகள் மிக அண்மையில் பரப்பப்பட  தொடங்கியவை அல்ல. கடந்த ஜந்து அ ல்லது ஆறு வருடங்களாக தொடர்ந்து  இந்த வதந்திகள் சமூகமயப்படுத் தப்பட்டுவருகின்றன.

முஸ்லிம் மக்கள் இவ்வாறு வந்தி கள் பரப்பப்படுவது தொடர்பில்  அறி ந்திருந்தும். அதற்கெதிரான அல் லது அதற்கு விளக்கமளிக்க  பயத்தி ன் காரணமாக முன்வரவில்லை. முஸ் லிம் தலைவர்கள் கூட இதனை கண்டும் காணதது போல் மௌனமாக மறுபுறம் பார்த்துக்கொண்டிருந்தனர். நாட்டின் மதத்தலைவர்கள் இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு வதந்திகள்  தொடர்பில் உண்மை நிலையை மக்களு க்கு தெளிவுபடுத்த முன்வராமல் மௌனம் காத்தனர்.

வதபெஹெத்  வதந்தியில் எந்த அடி ப்படை உண்மையுமில்லை என்பதனை நா டடின் படித்த உயர் மட்டத்தினர்  அறிந்திருந்தாலும் அது தொடர்பி ல் மக்களுக்கு உண்மையை தெளிவு படுத்த அவர்களும்முன்வரவில்லை.

இந்த வதபெஹெத் வதந்தி பொய்யானது  என்பது தொடர்பில்  நாட்டின் வை த்தியத்துறையினர், இராசனயவியல்  துறையினருக்கு மக்களுக்கு தெளி வுபடுத்தும் சந்தர்ப்பம் இருந் தும் அவர்கள் அந்தக்பணியை செய்ய  முன்வராமல் பொடுபோக்காகவே இருந்தனர்.

ஊடகவியலாளர்கள், நாட்டின் பிரபல   ஊடகங்கள் அனைத்தும்  இந்த முஸ் லிம் விரோத பிரச்சாரங்கள் பற்றி  அறிந்து வைத்திருந்தார்கள்.  இவர்கள் கூட பின்கதவால் முஸ்லிம்  விரோத பிரச்சாரங்களுக்கு உதவினார்களே தவிர மக்களுக்கு உண்மையை  விளக்கி தெளிவுபடுத்த முன்வராமல் கள்ள மௌனம் சாதித்தார்கள் .

நல்லாட்சி அரசு கூட பெரும் அழி வை கொண்டு வரும்  இந்த நாசகார வே லைத்திட்டங்கள் தொடர்பில்  அறிந்து வைத்திருந்தனர். நாட்டில் வாழும் எந்த மக்கள் பிரிவினருக்கு  எதிராகவும் துவேசத்தை,வெறுப்பை  தூண்டும் வகையிலான பிரச்சாரங் களுக்கு வேலைத்திட்டங்களுக்கு இடமளிக்காமல் அவற்றை தடை செய்வது  அரசின் மிகப் பிரதானமான பொறுப் பு. 

இப்பொறுப்பை  செய்தவற்கானஅத் தனை வளங்களும், வசதிகளும்  நல்லா ட்சி அரசுக்கு இருந்தும்  நல்லா ட்சி அரசுகூட இந்த முஸ்லிம் வி ரோத பிரச்சாராங்கைள, வேலைத்திட்டங்களையும் தடுப்பதற்கான எந்த மு யற்சியும் எடுக்காமல்கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந் தனர்.

ஒரு பெரஹரா வரும் முன் அதற்கு முன்னால் சாட்டைகளை நி லத்தில் அடித்தபடி ஒரு நாட்டியக் குழு முன்னால் நட னமாடிக் கொண்டே முன்னால் வருவார்கள்.

கண்டியில் நடந்த கலவரமானது, அந்த பெரஹராவில் வரும் சாட்டை அடிக்காரர்ஙகள் வருவது போன்றது. பெரஹரா பின்னால் வந்துகொண்டிரு க்கிறது. பெரஹரா இதனை விட பாரியது. முஸ்லிம்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் இப்பாரிய பெரஹரவை (ஆபத்தை) நிறுத்தவதற்கான ஒரேயொரு வழி சிங்கள சமூகத்தவரின் உள்ளத்தில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ள நச்சு க் கருத்துக்களை நீக்குவதன் மூலம் மாத்திரமே.

09 மார்ச் 2018 ராவய பத்திரிகையில் கண்டியில் நடந்த கலவரம் தொடர்பி ல் ஒரு விரிவான கட்டுரையை வரைந்துள்ளார். இலங்கையின் வரலாறு, இலங்கை மக்களின் வாழ்க்கைய நிலை இலங்கை சமூகத்தின் போக்குகள் தொ டர்பில் ஆழந்த பரிச்சயமுள்ள இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் அய்வன். இலங்கையின் அரசியல் போக்கு இலங்கையின் சமூக போக்குகள் தொடர்பில் இவர் முன்கூட்டியே எச்சரித்த பல  விடயங்கள் சமூகத்தில் நடந்தேறியிருக்கின்றன. இவர் தனது ஆழந்த அனுபவத்தை வைத் தே தனது கருத்துக்களை முன்வைக்கிறா ர் என்பதனை விக்டர் அய்வனை தொடர்ந்து வாசி த்து வருபவர்கள் புரிந்துகொள்வார்கள்.

விக்டர் அய்வன் தனது கட்டுரையில் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு வ ரவிருக்கும் பாரியதொரு அழிவு தொடர்பில் விஞ்ஞானபூர்வமாக விளக்கி அதற்கான சில தீர்வுகளையும் முன் வைத்துள்ளார். 

முஸ்லிம் சமூகம் இந்த அபாய அறிவிப்பை மிகவும் சீரியஸாக எடுத்து தமது எதிர்காலம் தொடர்பில் திட்டமிடுமா? அல்லது மாவனல்லை தர்காடவுன் ஜின்தொட்ட அம்பாறை கலவரங்கள் நடந்த போது Gas போத்தல் போல் அந்த நேரத்தில்  மட்டும் பொங்கி எழுந்து விட்டு ஓரிரு மாதங்களில் இவை அனைத்தையு ம் மறந்து விட்டு இக்கட்டுரையில் வருவது போல் 83 கலவரைத்தை போல் இன்னொரு கலவரம் வரும் வரை ஆழ்ந்த உறக்கத்துக்கு செல்லுமா?

09 மார்ச் 2018 ராவய பத்திரிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி
தமிழில் ARM INAS

3 comments:

  1. மிகச்சாியான ஒரு பதிவு..
    சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் முஸ்லிமகள் பற்றிய தப்பான என்னங்களை சரியான முறையில் தௌிவு படுத்தாமல் வெறுமனே இருந்தால்... மிகப் பயங்கரமான பின்விளைவுகளை காண வேண்டி வரும்.
    முஸ்லிம் மக்களிள் ஒரு பிரிவினா் (சிங்கள மக்களுடன் தொடா்புள்ள) இந்த பனியை (விளக்கமும், கருத்தாடலும்) மிகக் கவனமாக செய்ய வேண்டும்.
    இஜ்திமாக்களை விட இப்போது இது முக்கியம்.

    ReplyDelete
  2. Rightly said ...
    So many misconceptions about us ..
    The problem is like so many cooks in Muslim community all try to spoil the soup..
    Why ?
    WE do not have unity.
    We have different religious ideological groups.
    This gave them a chance to make troubles for us...
    Our weakness has been exploited .
    Look..

    ReplyDelete
  3. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.