மனம் மாறினார் மைத்திரி - UNP அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க விருப்பம்
-DC-
ஐக்கிய தேசிய கட்சிக்குத் தனி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குத் தேவையான பாராளுமன்ற உறுப்பினர்களை வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அரசாங்கமொன்றை நடத்திச் செல்வதற்கு தேவைப்படும் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 12 உறுப்பினர்களின் ஆதரவை, புதிய அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதாவது பெல்டி மாஸ்டர்கள் எப்போதும் தங்கள் பதவி,பணம் களவாடும் தந்திரம் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொள்ள மானம்,வெட்கம், ரோசம்,மக்களின் அபிலாசை,அவர்களின் நியாயமான கோரிக்கை எதனையும் இழக்கத் தயார். அந்த பெல்டிங் தத்துவத்தின் அடுத்த பெயர் எஸ்.எல்.எப்.பீ, யூ.என்.பி.
ReplyDeleteமனிதனின் நிலை இது , தேர்தலுக்கு முன்பு பேசிய ஆவேசப் பேச்சுக்களை மீட்டிப் பார்க்கிறேன் சிரிப்பாய் வருகிறது , இவருக்கு ஓட்டு போட்டோம் என்ற வருத்தமும் தான் , தேசத்தில் உறுதியும் நேர்மையுள்ள தலைமைத்துவத்திற்கு வெற்றிடம் நிலவுகிறது , தலைமைத்துவத்தை இழந்து நாடு தவிக்கிறது , குற்றம் செய்தவர்களை மீண்டும் தெரியு செய்வது ,இதன் பிரதி பலிப்பா
ReplyDelete