ஜனாதிபதியின் உத்தரவை மீறும் ஞானசாரர் - பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய ஹரீஸ்
ஜனாதிபதியின் உத்தரவை மீறி பலவந்த போக்குடன் செயற்பட்டு இறக்காமம் பகுதிக்குள் நுழையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரையும் சிங்கள ராவய பிக்குகளையும் உடன் கைது செய்ய வேண்டும் என விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் நேற்று சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைத்த அரசாங்கத்தை தோற்கடித்து விட்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் கூட சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழந்து வரும் பிரதேசத்தில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சிங்கள ராவய பிக்குகள் பலவந்தமாக சென்று இறக்காமத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு மாயக்கல்லி பகுதியில் பலவந்தமாக காணி சுவீகரிப்பதனை தடுத்து நிறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் உத்தரவை மீறி ஞானசார தேரர் மீளவும் அங்கு செல்ல முற்பட்டார். எனினும் பொலிஸார் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தினர். இல்லையேல் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டிருக்கும் .
இது தொடர்பாக முன்னைய ஆட்சியிலும் குறிப்பிட்டோம். எனினும் இது தொடர்பில் செவிமடுக்காததினால் அளுத்கமவில் பாரிய இனக்கலவரம் ஏற்பட்டது.
எனவே ஜனாதிபதியின் உத்தரவை மீறி பலவந்த போக்குடன் செயற்படும் பொதுபல சேனாவின் ஞானசார தேரரையும் சிங்கள ராவய பிக்குகளையும் உடன் கைது செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் ஹரீஸ் சுட்டிக்காட்டினார்.
ஏன் ஏனைய அமைச்சர்கள் வாய்திறக்க மாட்டார்களா?
ReplyDeleteHow do you know, Janasara has gone beyond My3. Do not trust My3. He will tell you some thing to you and another thing to Janasara.
ReplyDeleteஞானசாரைக்கும் அவரை வளர்த்துப் போசிக்கும் குலாத்துக்கும் ஆதரவளிக்கக்கூடிய முஸ்லிம்களும் இருக்கிறார்கள் என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா?
DeleteUseless to believe sirisena...he also kind a extremist...solution is protect own villages by our self...
ReplyDeleteநீதியை நேசிக்கும் ஏனையோரும் குறிப்பாக இதர முஸ்லிம்களும் பங்கு கொண்டிருக்க வேண்டிய பேச்சு.
ReplyDeleteஇவ்வித சமுகப் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் ஓர் துணிச்சல் வேண்டும். பாரராட்டுக்கள்!