மஹிந்தவைக் கண்டு அஞ்சுகின்றோம் - டிலான்
நாம் இன்றும் மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டு அஞ்சுகின்றோம் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று -02- இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இதனைத் கூறினார்.
உண்மையில் மஹிந்த ராஜபக்ஷவைக் கண்டு அஞ்சுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவர் எங்களுடைய கட்சியை உடைத்து விடுவார் என அஞ்சுகின்றோம், எமது கட்சி உறுப்பினர்களை ஏமாற்றி விடுவார்கள் என அஞ்சுகின்றோம். அதே போல நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற முடியாத சில வாக்குறுதிகளை அளித்து விடுவார் என அஞ்சுகின்றோம்.
நாமல் ராஜபக்ஷ அரசியலில் தோற்றாலும் நடனத்தில் வெல்வதற்குரிய எல்லாத் திறமைகளும் உள்ளது அதை நாங்கள் கடந்த 5 நாட்களாக அவதானித்துக் கொண்டே இருந்தோம் எனவும் கூறினார்.
அத்துடன், நாமல் பபா, பசில் பபா, அலிபபா போன்றவர்கள் மக்களுடைய பிரச்சினையைப் பற்றி பேசவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
super
ReplyDeleteLoL good one
ReplyDeleteநாங்களும் அஞ்சுகிறோம், இனக்கலவரத்தை உண்டாக்கி விடுவாரோ என்று.
ReplyDelete