Header Ads



புறா சண்டையில் ரிப்கான் கொலை - 6 பேர் நேற்று சரண்


(விடிவெள்ளி)

பொல்­க­ஹ­வெல பகு­தியில் புறா சண்­டையில் படு­கா­ய­ம­டைந்த இளைஞர் உயி­ரி­ழந்த சம்­பவத்துடன் தொடர்­பு­டைய ஆறு பேர் பொல்­க­ஹ­வெல பொலிஸ் நிலை­யத்­திற்கு சென்று நேற்றைய தினம் சர­ணடைந்­துள்­ளனர்

பொல்­க­ஹ­வெல பொலிஸ் பிரிவில் தெல்­கொல்லப் பகு­தியில் புறா பிரச்­சி­னையின் கார­ண­மாக தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி படு­கா­ய­முற்ற 21 வய­து­டைய எம். ஆர். எம். ரிப்கான் என்ற  இளைஞர் குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மர­ண­ம­டைந்தார். .

காணாமல் போன புறாக்­களை பெறும் பொருட்டு ரிப்கான் மற்றும் அவ­ரது நண்­பர்கள் தெல்­கொல்ல என்ற இடத்­திற்கு சென்­றுள்­ளனர். அங்கு சென்ற போது புறாவை அபகரித்திருந்த தரப்­பி­ன­ருக்கும் ரிப்கானின் நண்­பர்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற வாய் தர்க்கம் முற்­றி­யதில் தக­ராறு ஏற்­பட்­டுள்­ளது.

இதனையடுத்து ரிப்கான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் கடும் காயமடைந்த அவர் பொல்­க­ஹ­வெல மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். அங்­கி­ருந்து மேல­திக சிகிச்­சைக்கு குரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நிலையில் கடந்த செவ்­வாய்­கி­ழமை உயி­ரி­ழந்தார்.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் நேற்றைய -05- தினம் பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஒரு புறாவுக்கு போரா?????? பெரிய அக்கபோரக அல்லவா இருக்கிறது.

    ReplyDelete
  2. ان الشيطان لكم عدو مبين

    ReplyDelete

Powered by Blogger.