Header Ads



கோத்தபாய ஆஜரானார்...!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சற்று முன்னர் கோத்தபாய இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தபாயவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

பாரியளவில் நிதி மோசடிகளில் கோத்தபாய ஈடுபட்டதாக, தற்போதைய ஆளும் கட்சி குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எந்தவிதமான மோசடிகளிலும் தாம் ஈடுபடவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உள்ளே போக வேண்டிய ஆள்...... கிரீஸ் பூதத்திற்கான காரணத்தை ஆராய்ந்தாலே போதும், இவரை உள்ளே தள்ள முடியும்.

    ReplyDelete

Powered by Blogger.