Header Ads



அளுத்கம கலவரத்திற்கு பொதுபல சேனா காரணமல்ல, முஸ்லிம்களே காரணம் - ஞானசார தேரர்

அளுத்கம பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு பொதுபலசேனா அமைப்பு எந்த பொறுப்பல்ல, பொலிஸாரின் அலட்சியப்போக்கே  கலவரத்துக்குக் காரணமென பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஹத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.  

கிருலப்பனையிலுள்ள போதி பௌத்த நிலையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;  

12 ஆம் திகதி பொசன் போயா தினத்தன்று களுத்துறை பிரிவுக்குப் பொறுப்பான பௌத்த பிக்கு ஒருவர் மத போதனைகளை வழங்குவதற்காக அளுத்கம பகுதிக்குச் சென்றபோது  அப்பிக்குவுக்கு இடையூறு விடுத்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், அப்பிக்கு சென்ற வாகனத்தின் சாரதியையும் தாக்கியதோடு நின்றுவிடாமல் பிரச்சினையை தடுக்க வந்த பிக்குவினையும் தாக்கியுள்ளனர்.  இலங்கையில் பிக்கு ஒருவரை தாக்குவதென்பது சாதாரண விடயமல்ல. இச்சம்பவமே  அளுத்கமவில் ஏற்பட்ட பதற்ற நிலைக்கு பிரதான காரணமாகும். 

3 comments:

  1. யாரிடம் பேய் செல்வது.............முஸ்லிம்கள் சிங்களவா்களுக்கு எதிராக செய்யும் குற்ற்ங்களை சிங்களவர்கள் துக்கிப்பிடிப்பதில்லை- ஐுலை ஐனாதிபதி உரை

    ReplyDelete
  2. if they attack you make it confirm & give them to the police / court, why you want to kill other innocent people ? you are in which century ? i don't believe Buddhism guide you to do so even, so you follow which region ? or you follow your mind or somebodies mind ?

    ReplyDelete
  3. Payankarawaathi nee saiyama unda ummaada purusana sancha nee naasama poda yaa allah ankaludaya mana dsnthosappadum alawukku ewanukku koodiya wiraiwl oru arputhaththa kaattu yaa rahman yaa sadhidhul ikaab ameen

    ReplyDelete

Powered by Blogger.